சித்தரிக்கப்பட்ட படம் 
செய்திகள்

ம.பி.யில் போலீஸ் தேர்வு ஊழல் - 30 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு சிறை

மத்திய பிரதேசம் மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு ஆள்தேர்வு செய்யப்பட்டதில் நடைபெற்ற ’வியாபம்’ ஊழலில் 30 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் தொழில் முறை தேர்வு வாரியமான ’வியாபம்’ மூலம் மாநில அரசு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.

இந்த தேர்வுகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது. மேலும் இந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சுமார் 40 பேர் மர்மமான முறையில் மரணமடைந்தனர். இதனால் வியாபம் ஊழல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT