செய்திகள்

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்- சக்சேனாவுக்கு 18ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் ராஜீவ் சக்சேனாவிடம், விசாரணை நிறைவடைந்ததையடுத்து அவரை 18ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #AgustaWestlandCase #RajeevSaxena

விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தலைமறைவாக இருந்த மற்றொரு இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா 31-1-2019 அன்று துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக் காவல் நிறைவடைந்ததையடுத்து இன்று அவரை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.