அகமதாபாத்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது முதல் நிகழ்ச்சியாக அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், டிரம்பும் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தால் நீங்கள் மனதார வரவேற்கப்படுகிறீர்கள். இது குஜராத் மாநிலம். ஆனால் உங்களை வரவேற்பதில் முழு நாடும் உற்சாகமாக உள்ளது.
இந்த நிகழ்வின் பெயரின் பொருள் - 'நமஸ்தே' மிகவும் ஆழமானது. இது உலகின் பழமையான மொழி சமஸ்கிருதத்தில் இருந்து வந்த ஒரு சொல். இது அந்த நபருக்கு மட்டுமல்ல, அவருக்குள் இருக்கும் தெய்வீகத்திற்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம் என்பதாகும்.
புதிய வரலாறு உருவாக்கப்படுகிறது. 5 மாதங்களுக்கு முன்பு நான் எனது அமெரிக்க பயணத்தை 'ஹவுடி மோடி' உடன் தொடங்கினேன், இன்று எனது நண்பர் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது இந்திய பயணத்தை 'நமஸ்தே டிரம்ப்' உடன் அகமதாபாத்தில் தொடங்குகிறார்.
இந்தியா-அமெரிக்க உறவுகள் இனி மற்றொரு கூட்டாண்மை அல்ல. இது மிக பெரிய மற்றும் நெருக்கமான உறவு ஆகும். ஒருவர் 'சுதந்திர சிலை' பற்றி பெருமிதம் கொள்கிறார், மற்றவர் 'ஒற்றுமை சிலை' பற்றி பெருமிதம் கொள்கிறார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது குடும்பத்தாருடன் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளது இரு நாடுகளுக்கிடையேயான வலுவான நட்புறவை பிரதிபலிக்கிறது.
முதல் பெண்மணி மெலனியா, நீங்கள் இங்கு இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய மரியாதை ஆகும். ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான அமெரிக்காவுக்காக நீங்கள் செய்த பணி அதன் பலனைத் தருகிறது. குழந்தைகள் மற்றும் சமூகத்திற்காக நீங்கள் செய்த பணி பாராட்டத்தக்கது.
இவ்வாறு அவர் பேசினார்.