அப்போது கேலரியில் இருந்து ரசிகர் ஒருவர் 6 அடி தடுப்பு வேலியை தாண்டி ஆடுகளத்தை நோக்கி ஓடினார். இந்திய வீரர்கள் அருகில் சென்ற அவர், திடீரென விராட் கோலியின் காலை தொட்டு வணங்கினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பாதுகாப்பு அதிகாரிகள் அவரை இழுத்துச் செல்ல ஓடி வந்தனர். அப்போது விராட் கோலி அந்த ரசிகரை தனது தோளுடன் அணைத்துக் கொண்டு பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி அவரை கண்டிக்க வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொண்டார்.
Nothing To Say😍💥
Next Level Fanism😎🙏🏻
And King Kohli Caring Towards His Fan😭❤️
U N B E L I E V A B L E🔥#ViratKohli#KingKohli#INDvBANpic.twitter.com/V7yfhhoz8P
அந்த ரசிகர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுரஜ் பிஸ்ட் (வயது 22) என்றும், இந்தூரில் சமையல் வேலை செய்து வருகிறார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.