கைது 
செய்திகள்

விழுப்புரம் அருகே முன்விரோத தகராறு- 2 பேர் கைது

விழுப்புரம் அருகே முன்விரோதம் தகராறில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

விழுப்புரம் அருகே உள்ள செங்காடு கிராமத்தில் வளவனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு முன்விரோதம் காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் ஸ்டாலின் (வயது 36), அவரது உறவினர் பாப்பிஸ் (50) ஆகியோர் ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.