செய்திகள்

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு உண்டியல்களில் சேமித்த ரூ.9 ஆயிரத்தை வழங்கிய விழுப்புரம் சிறுமி

கடந்த 4 ஆண்டுகளாக சேமித்து வந்த உண்டியல் பணம் ரூ.9 ஆயிரத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்காக விழுப்புரம் சிறுமி அனுப்பி உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #KeralaRain #KeralaFloods

மாலை மலர்

தென்மேற்கு பருவமழையால் கேரள மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு மத்திய அரசு மட்டுமின்றி பல்வேறு மாநில அரசுகளும், பொது சேவை அமைப்புகளும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.