மதுரை:
மதுரை மேற்கு மின் வினியோக செயற்பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை வில்லாபுரம் துணை மின் நிலையத்தில் வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
எனவே அந்த நேரத்தில் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்னகண்மாயின் மேற்கு பகுதிகள், எப்.எப். ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர் பகுதிகள், ஜெய்ஹிந்த்புரம் 1, 2-வது மெயின் வீதி வரை, பாரதியார் ரோடு, ஜீவாநகர் 1, 2-வது தெரு வரை, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம், 1 முதல் 3-வது தெரு, அருணாசலம் பள்ளி பகுதிகள், முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே. புரம், சுப்ரமணியபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.