செய்திகள்

காரிமங்கலம் அருகே கிராம சபை கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் சாலை மறியல் செய்த பொதுமக்கள்

காரிமங்கலம் அருகே கிராம சபை கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாலை மலர்

காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜிட்டாண்ட அள்ளி கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

இந்தகூட்டத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மகேந்திரமங்கலம் போலீசார் அரசு ஊழியர்கள் போராட்டம் நடைபெறுவதால் அதிகாரிகள் கலந்து கொள்ள முடியவில்லை. அடுத்த வாரம் சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அதிகாரிகள் கலந்து கொள்வதாக வாக்குறுதி அளித்து சமாதானம் செய்தனர். அதனை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். 

இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.