வேட்டவலம்:
வேட்டவலத்தை அடுத்த அண்டம்பள்ளம் கிராமம், அண்ணாநகர் காலனி செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்குவதால் அந்த பகுதி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.