வேலூர்:
வேலூரை அடுத்த விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் வேணுகோபாலன் (வயது 42). துப்புரவு தொழிலாளி. இவர் நேற்று இரவு 7.30 மணியளவில் பழைய பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் ஒன்று திடீரென கத்தியால் வேணுகோபாலனை வெட்டி விட்டு தப்பிச்சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த வேணுகோபாலனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேணுகோபாலனை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடிய மர்மகும்பலை தேடி வருகின்றனர். ‘வேணுகோபாலனுக்கும், அவரது மருமகனுக்கும் இடையே குடும்பதகராறு இருந்து வருவதாகவும், அதனால் மர்ம கும்பலை ஏவி அவரை கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று போலீசார் தெரிவித்தனர்.