விபத்து 
செய்திகள்

சிங்கம்புணரி அருகே வாகனம் மோதி ஆசிரியர் பலி

சிங்கம்புணரி அருகே நடந்து சென்ற ஆசிரியர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிங்கம்புணரி:

சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்களம் இமானுவேல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது48). இவர் தனியார் பள்ளி ஆசிரியராக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி ஓய்வுபெற்றார். இவர் திண்டுக்கல் -திருப்பத்தூர் சாலை ஓரத்தில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.வி. மங்களம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT