இவர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் நன்னடத்தை விதியை மீறி இரவு நேரத்தில் வீரர்கள் தங்கும் விடுதியில் இருந்த வெளியேறினார். அடுத்த நாள் அணி ஹோட்லில் இருந்து புறப்படுவதற்கு குறிப்பிட்ட காலகெடுவிற்குள் வீரர்கள் வந்தடைய வேண்டும். ஆனால், வாண்டர்சே அந்த நேரத்திற்குள் ஹோட்டல் வந்தடையவில்லை.
இதுகுறித்து சரியான விளக்கம் அளிக்காததால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓராண்டு தடைவிதித்துள்ளது. அத்துடன் வீரர்கள் ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் வருவாயில் 10 சதவீதம் அபராதமாகவும் விதித்துள்ளது. 2-வது டெஸ்டின்போது இந்த சம்பவம் நடைபெற்றதால், உடனடியாக சொந்த நாடு திரும்பினார்.