மதுரை:
மதுரை செல்லூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
நல்லா வெயிட் தூக்குபவர் என்ற அர்த்தத்தில் மோடி பலசாலி என ரஜினி கூறியிருப்பார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கே முழு அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் கேட்க வேண்டியதில்லை. 7பேரின் விடுதலை விவகாரத்தில் மாநில அரசிடம் முழுமையான வேகம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #PMModi #Rajinikanth