செய்திகள்

50 அடியை நெருங்கும் வைகை அணை நீர்மட்டம்

35 அடியில் இருந்த வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து தற்போது 48.82 அடியாக உள்ளது. நாளை 50 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடலூர்:

கோடை மழை ஓரளவு கைகொடுத்ததால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 127 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் அணைக்கு நீர்வரத்து 905கனஅடியாக குறைந்துள்ளது.

மேலும் அணையின் நீர்மட்டமும் 126.40 அடியாக உள்ளது. அணையில் இருந்து 1406 கனஅடிநீர் திறந்துவிடப்படுகிறது.

கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை அணைக்கு நீர்வரத்து 1110 கனஅடியாக உள்ளது. ஆனால் நீர்திறப்பு மதுரைமாநகர கூடிநீருக்காக மட்டும் 60 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் 35 அடியில் இருந்த வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து தற்போது 48.82 அடியாக உள்ளது. நாளை 50 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மதுரை மாநகர குடிநீருக்கு தட்டுப்பாடு நீங்கியுள்ளது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 123.82 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 11, தேக்கடி 1.6 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.