கைது 
செய்திகள்

வேகத்தடை அமைப்பதில் இருதரப்பினரிடையே மோதல்- வாலிபர் கைது

வடகாடு அருகே வேகத்தடை அமைப்பதில் இருதரப்பினரிடையே மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வடகாடு:

வடகாடு அருகே உள்ள கன்னியாங்கொல்லை பகுதியில் ஒரு தரப்பினர் தாங்கள் வசிக்கும் பகுதி அருகே உள்ள சாலையில் வேகத்தடை அமைத்தனர். இதற்கு வானக்கன்காடு பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வேகத்தடையை அகற்றி உள்ளனர்.

இதில் இரு தரப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் இருதரப்பினரில் காயமடைந்த 3 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து இருதரப்பினரும் வடகாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, வானக்கன்காடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.