செய்திகள்

வடகாடு மலைப்பகுதியில் காலி பிளவர் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

வடகாடு மலைப்பகுதியில் காலி பிளவர் வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாலை மலர்

சத்திரப்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே வடகாடு, வண்டிப்பாதை, பால்கடை, கண்ணணூர், மேட்டுப்பட்டி, பெத்தேல்புரம், புலிக்குத்திக்காடு, சிறுவாட்டுக்காடு உள்பட 14 மலைக்கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் காலிப்பிளவர் நடவு செய்துள்ளனர்.

தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. மலைப்பகுதிகளில் காலிப்பிளவர் வரத்து குறைவு காரணமாக விலை 2மடங்கு உயர்வடைந்துள்ளது. கடந்த மாதம் 15 காலிப்பிளவர் பூக்கள் கொண்ட ஒரு மூட்டை ரூ.130-க்கு ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

தற்போது காலிப்பிளவர் வரத்து குறைவு காரணமாக ஒரு பை காலிப்பிளவர் ரூ.250-க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்வதால் மலைப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.