மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சல்மான் குர்ஷித்தின் வீடு உத்தரகாண்டில் உள்ள நைனிடால் உள்ளது. இந்த வீட்டிற்கு சிலர் திடீரென தீ வைத்துள்ளனர்.
வீடு தீப்பற்றி எரியும் படத்தை சல்மான் குர்ஷித் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ராகேஷ் கபில் மற்றும் 20 பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.