உத்தரகாண்ட் மாநிலம் சாம்பவாத் பகுதியில் இன்று காலை 8 பேர் ஒரு காரில் சென்றுகொண்டிருந்தனர். மலைப்பாதையில் சவாலா என்ற இடத்தில் வளைவில் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது.
இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி, அதில் இருந்த 8 பேரும் உயிரிழந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோல் இன்று அதிகாலை மகாராஷ்டிர மாநிலம் பால்கர் நகரில் மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.