செய்திகள்

உத்தரகாண்டில் சோகம் - கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Uttarakand #Illicitliquor

மாலை மலர்

டேராடூன்:

உத்தரகாண்டின் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது.

இந்நிலையில், இதை வாங்கிக் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை மோசமடைந்து உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

சட்ட விரோதமாக நடக்கும் கள்ளச்சாராயம் விற்பனைக்கு உள்ளூர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Uttarakand #Illicitliquor