செய்திகள்

வடகொரியா ஏவுகணை சோதனை: ஐ.நா. அவரச கூட்டத்தை கூட்ட அமெரிக்கா வேண்டுகோள்

வடகொரியா ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து, ஐ.நா. அவரச கூட்டத்தை கூட்ட அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாலை மலர்

பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, தொடர்ந்து ஏவுகணை மற்றும் மற்றும் ராக்கெட் எஞ்சின்களை சோதனை செய்யும் வடகொரியா நேற்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை சோதனை செய்தது.

வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து நேற்று காலை, சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரிய பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் உடன் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரியா விவகாரம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.