செய்திகள்

உ.பி. அரசின் மைய கல்வி திட்டத்துக்குள் மதரசாக்களை கொண்டுவர வேண்டும் - மந்திரி வலியுறுத்தல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதரசா எனப்படும் இஸ்லாமிய பள்ளிகளை மாநில மைய கல்வித் திட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என அம்மாநில மந்திரி மொஹ்சின் ராஜா தெரிவித்துள்ளார். #MohsinRaza #Madrassa

லக்னோ:

நாடு முழுவதும் மதரசா எனப்படும் இஸ்லாமிய பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு இஸ்லாம் குறித்தும், இஸ்லாத்தை பின்பற்றும் வழிமுறைகள் குறித்தும் கற்பிக்கப்படுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த உத்தரப்பிரதேச மாநில சிறுபான்மை நலத்துறை மந்திரி மொஹ்சின் ராஜா, மதரசாக்களை மாநில மைய கல்வி திட்டத்துக்குள் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமன்றி நாடு முழுவதும் உள்ள மதக்கல்வி நிறுவனங்களை அந்தந்த மாநில மைய கல்வித்திட்டத்துக்குள் இணைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடியை தாம் சந்தித்து பேச இருப்பதாகவும் மந்திரி மொஹ்சின் ராஜா தெரிவித்துள்ளார். முன்னதாக மதரசாக்களுக்கு சீருடை வழங்க வேண்டும் என இவர் கூறிய கருத்து சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. #MohsinRaza #Madrassa

SCROLL FOR NEXT