செய்திகள்

உமேஷ் யாதவ் அதிர்ஷ்டம் இல்லாதவர்- பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் சொல்கிறார்

உமேஷ் யாதவிற்கு தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அதிக அளவில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #TeamIndia

மாலை மலர்

8 டெஸ்ட் போட்டியில் ஒன்றில் மட்டுமே விளையாடினார். 2018-ல் இந்தியா விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் மட்டுமே களம் இறங்கியுள்ளார். சிறப்பாக பந்து வீசும் உமேஷ் யாதவிற்கு அதிர்ஷ்டம் இல்லை என பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.

உமேஷ் யாதவ் குறித்து பரத் அருண் கூறுகையில் ‘‘இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடரில் ஏராளமான போட்டியில் உமேஷ் யாதவ் விளையாட முடியாமல் போனது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. இதற்கு முக்கிய காரணம் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதுதான்.