உலகமெங்கும் கொரோனாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்பட்ட விஷயமாக பாலைவன வெட்டுக்கிளிகள் உள்ளது. லோகஸ்ட் எனப்படும் இந்தவகை வெட்டுக்கிளிகள் ஒரு நாளைக்கு 150 கிலோ மீட்டர் வரை பறக்கும் தன்மை கொண்டவை. ஆப்பிரிக்காவில் தாக்குதலைத் தொடங்கிய இந்த வெட்டுக்கிளிகள் ஏமன்,ஈரான்,சோமாலியா வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்கிருந்து இந்தியாவிற்குள் நுழைந்தது.
அங்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை தின்று தீர்த்த இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அரசும்,ஆய்வாளர்களும் உறுதி கூறினர்.