செய்திகள்

வினூ மங்கட் டிராபி- 30 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார் அர்ஜூன் தெண்டுல்கர்

19 வயதிற்கு உட்பட்டோருக்கான வினூ மங்கட் டிராபியில் அர்ஜூன் தெண்டுல்கர் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளார். #ArjunTendulkar

மாலை மலர்

குஜராத் அணி முதலில் களம் இறங்கியது. முதல் ஓவரை அர்ஜூன் தெண்டுல்கர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் குஜராத் கேப்டனை டக்அவுட்டில் வெளியேற்றினார். அடுத்தடுத்த ஓவர்களில் பிரியேஷ் குமார் (1), எல்எம் கோசர் (8) ஆகியோரை வெளியேற்றினார்.

குஜராத் அணி 16 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறுவதற்கு அர்ஜூன் முக்கிய காரணமாக இருந்தார். தொடர்ந்து விளையாடிய குஜராத் 142 ரன்னில் சுருண்டது. அர்ஜூன் தெண்டுல்கர் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.