ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் உள்ள ரத்னுசக் ராணுவ முகாமில் மர்ம நபர்கள் 2 பேர் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர்.
இதைக்கண்ட ராணுவ அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்த வீடியோ கேமராவை பரிசோதனை செய்தனர். அதில், ராணுவ முகாம் குறித்த விவரங்கள், வீடியோ காட்சிகளை பாகிஸ்தானிற்கு அனுப்பியது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களை உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர் ராணுவ அதிகாரிகள், அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.