தாக்குதலுக்குள்ளான சபிட்டி எண்ணெய் கப்பல் 
செய்திகள்

சவுதி கடல் எல்லையில் ஈரானிய டேங்கர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

ஈரான் நாட்டை சேர்ந்த பெட்ரோலிய டேங்கர் கப்பல் மீது செங்கடல் பகுதியில் இன்று ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

மாலை மலர்

ஈரான் அரசுக்கு சொந்தமான 'சபிட்டி’ என்ற பெட்ரோலிய டேங்கர் கப்பல் பெட்ரோலிய கச்சா எண்ணையுடன் இன்று செங்கடல் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது.

ஜெத்தா துறைமுகத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர்  தூரத்தில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 5 மற்றும் 5.20 மணியளவில் கப்பலின் மீது இரு ஏவுகணைகள் அடுத்தடுத்து தாக்கின.