தடம் புரண்ட ரெயில் பெட்டி 
செய்திகள்

பீகார்: சிறப்பு ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

கோரக்பூரில் இருந்து கொல்கத்தாவிற்கு சென்ற சிறப்பு ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால், ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து கொல்கத்தாவிற்கு பூஜா சிறப்பு ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் பீகார் மாநிலம் சிலாயட் - சிஹோ இடையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.

இதுவரை காயம் குறித்து தகவல் ஏதும் இல்லை. அந்த ரெயில் பாதியைில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.