டாஸ் வென்ற தூத்துக்குடி அணியின் கேப்டன் சிவா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, காஞ்சி வீரன்ஸ் அணியின் விஷால் மற்றும் சித்தார்த் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். விஷால் 2 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர், சித்தார்துடன் ஜோடி சேர்ந்து அணியின் கேப்டன் பாபா அபரஜித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.