செய்திகள்

சிவகங்கை மாவட்டத்திற்கு டி.டி.வி.தினகரன் நாளை வருகை

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நாளை சிவகங்கை வருகிறார்.

மாலை மலர்

தேவகோட்டை:

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நாளை (29-ந் தேதி) சிவகங்கை வருகிறார்.

காளையார்கோவிலில் கட்சி பிரமுகரின் இல்லத் திருமண விழாவை நடத்தி வைக்கும் தினகரன் பின்னர் பனங்குடி, சொக்கநாதபுரம், செம்பனூர், ஆலங்குடி, மானகிரி ஆகிய பகுதிகளில் நடைபெறும் கொடியேற்று விழாக்களிலும் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து தேவகோட்டையில் வடக்கு ஒன்றியம், முள்ளிக்குண்டு ஆகிய இடங்களில் கட்சிக் கொடி ஏற்றுகிறார். சாத்தான்கோட்டையில் கட்சி பிரமுகரின் இல்ல விழாவில் பங்கேற்கிறார்.

இறகுசேரியில் குமார் இல்ல புதுமனை விழாவில் பங்கேற்கும் தினகரன் பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. சொர்ணலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலாளர் கருப்பையா ஆகியோர் வீடுகளுக்கு செல்கிறார்.

டி.டி.வி. தினகரன் சிவகங்கை மாவட்டம் வருவதையொட்டி அவருக்கு மேள,தாளங்கள் முழங்க பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு மாவட்டச் செயலாளர் உமாதேவன் தலைமையில் அளிக்கப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இளைஞரணி இணைச் செயலாளர் முருகன், தேவகோட்டை நகரச் செயலாளர் கமலக்கண்ணன், கண்ணன் குடி ஒன்றியம் சரவண மெய்யப்பன் என்ற கார்த்திக், இறகு சேரி குமார், தமிழ்குமரன், கண்ணன், நிலவழகன், செந்தில் குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.