செய்திகள்

எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - டிடிவி தினகரன் பேட்டி

தகுதிநீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் தங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்தார். #MLAsDisqualificationCase #TTVDhinakaran

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி வந்த 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. முதலில் இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால், இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் இவ்வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.