ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தஹிலரமானி, நீதிபதி துரைசாமி ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள்.
அப்போது டிராபிக் ராமசாமி ஆஜராகி கூறியதாவது:-
‘மெரினா கடற்கரையில், கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்ட பகுதியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்ததை எதிர்த்தும், அங்குள்ள மறைந்த முதல்- அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் சமாதிகளை கிண்டிக்கு மாற்ற வேண்டும். 3 பேரது உடலை தோண்டி எடுக்க வேண்டும் என்றும் பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.