விபத்து 
செய்திகள்

அறந்தாங்கி அருகே டிராக்டர் மோதி தொழிலாளி பலி

அறந்தாங்கி அருகே நடந்து சென்ற தொழிலாளி மீது டிராக்டர் மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்து போனார்.

மாலை மலர்

அறந்தாங்கி:

அறந்தாங்கியை அடுத்த நாகுடியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 49). தொழிலாளி. இவர் நேற்று தனது வீட்டில் இருந்து கடைத் தெருவிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மூர்த்தி மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த மூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக் கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து நாகுடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.