இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 1901-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக அதிக வெப்பமண்டல மாதமாக மாறியுள்ள நிலையில், வரவிருக்கும் செப்டம்பர் மாதத்திலும் வழக்கத்தை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மாதாந்திர அறிக்கையின்படி, செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் பெய்யும் மழையின் அளவு நீண்டகால சராசரியில் 91 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. 1971 முதல் 2020 வரையிலான தரவுகளின் அடிப்படையில், செப்டம்பர் மாதத்திற்கான நீண்டகால சராசரி மழைப்பொழிவு 167.9 மி.மீ ஆகும். மேலும், நாடு முழுவதும் வழக்கத்தை விட அதிகபட்ச வெப்பநிலையும் தொடர வாய்ப்புள்ளது.
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் எல் நினோ நிலவரம் பலமடைந்து வருவதே இந்த மழைப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. எல் நினோ வலுவடைந்து வருவதால், தென்மேற்கு பருவமழையின் இறுதிப் பகுதியிலும் மழைப்பொழிவு பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்ஜய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தின் சராசரி வெப்பநிலை 28.01 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இது வழக்கமான சராசரி வெப்பநிலையான 27.34 டிகிரி செல்சியஸை விட அதிகம். அதேபோல, இரவிலும் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 24.36 டிகிரி செல்சியஸாக உயர்ந்து, 1901-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக அதிகபட்ச வெப்பமண்டல ஆகஸ்ட் மாதமாக இது அமைந்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 213.3 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது 2001-க்குப் பிறகு பதிவான ஏழாவது குறைந்தபட்ச மழைப்பொழிவாகும். இம்மாதத்தில் நான்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி, சுமார் 26 நாட்கள் நீடித்தபோதிலும், அவற்றின் தாக்கம் பெரும்பாலும் இந்தோ-கங்கை சமவெளிப் பகுதிகளில் மட்டுமே மையம் கொண்டிருந்தது. இதனால் நாட்டின் பிற பகுதிகள் கடுமையான மழைப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.