தலைப்புச்செய்திகள்

பீகாரில் சுகாதாரத்துறைஅமைச்சராக நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் பொறுப்பேற்றுள்ளார்.

பீகாரின் முன்னாள் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், வெள்ளிக்கிழமை அன்று பாட்னாவில் பீகாரின் சுகாதாரத்துறை அமைச்சராக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்.

பீகாரில் சாம்ராட் சௌத்ரி தலைமையிலான அரசு அமைக்கப்பட்டு 22 நாட்களுக்குப் பிறகு, வியாழக்கிழமை பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது.

பீகாரில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு, வியாழக்கிழமை (மே 7) தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியது மேலும் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் 32 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

பீகாரின் முன்னாள் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் சுகாதாரத்துறை அமைச்சராக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார். பதவியேற்ற பிறகு, 2025 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தேர்ந்தெடுத்ததற்காக பீகார் மக்களுக்கு நிஷாந்த் குமார் நன்றி தெரிவித்துள்ளர்.

மேலும், இந்தப் பொறுப்பைத் தன்னிடம் ஒப்படைத்ததற்காக மூத்த கட்சித் தலைவர்களுக்கும் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரிக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளர்.

விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் உள்ள மூன்று அமைச்சர்கள், பீகாரின் முன்னாள் முதலமைச்சர்களின் மகன்கள் ஆவர். நிஷாந்த் குமாரைத் தவிர, ஜெகந்நாத் மிஸ்ராவின் மகன் நிதீஷ் மிஸ்ரா மற்றும் ஜிதன் ராம் மன்ஜியின் மகன் சந்தோஷ் குமார் சுமன் என்ற சந்தோஷ் மன்ஜி ஆகியோருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.