செய்திகள்

நெத்திமேடு பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

நெத்திமேடு பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மாலை மலர்

சேலம்:

சேலம் மாவட்டம் நெத்திமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே, அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நெத்திமேடு, அன்னதானப் பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிப்பாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக் கன்பட்டி, கொண்டலாம் பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனுர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. 

இந்த தகவலை சேலம் நெத்திமேடு துணை மின்நிலையம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.