செய்திகள்

தக்காளி, கத்தரிக்காய், பீன்ஸ் விலை உயர்வு

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 80-க்கு விற்கப்படுகிறது.

மாலை மலர்

போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 80-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் கடந்த வாரம் ரூ. 10-க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது ரூ. 18-க்கு விற்பனையாகிறது. கத்தரிக்காய் விலையும் அதிரடியாக கிலோ ரூ. 30 ஆக உயர்ந்து உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட லாரிகளில் காய்கறி வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை விவரம் வருமாறு:-

தக்காளி - ரூ.18

வெங்காயம் -ரூ.20

சி.வெங்காயம்- ரூ.45

கேரட் -ரூ.30

பீன்ஸ்- ரூ.80

முட்டைகோஸ்- ரூ.5

வெண்டைக்காய் - ரூ.15

இஞ்சி - ரூ.50

உருளை - ரூ.20

பாகற்காய் - ரூ.30

கொத்தவரை - ரூ.15

வெள்ளரிகாய் - ரூ.20

மாங்காய் - ரூ.10

அவரைக்காய் - ரூ.25

முருங்கைகாய் - ரூ.35

புடலங்காய் - ரூ.12

கோவக்காய் - ரூ.12

கத்தரிக்காய்- ரூ.30

கத்தரிக்காய் ரூ. 30