செய்திகள்

டிஎன்பிஎல் 2018- காஞ்சி வீரன்ஸை வீழ்த்தி 8 புள்ளிகள் பெற்றாலும் பிளேஆஃப் சுற்றை இழந்த திருச்சி வாரியர்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் காஞ்சி வீரன்ஸை வீழ்த்தி 8 புள்ளிகள் பெற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப் சுற்றை இழந்தது திருச்சி வாரியர்ஸ் #TNPL2018

மாலை மலர்

பின்னர் 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. பரத் ஷங்கர், மணி பாரதி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணி பாரதி 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து பாபா இந்ரஸித் 26 ரன்னிலும், சுரேஷ் குமார் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் பரத் ஷங்கர் 43 பந்தில் 69 ரன்கள் குவித்தார்.

சத்தியமூர்த்தி சரவணன் அவுட்டாகாமல் 16 பந்தில் 23 ரன்கள் அடிக்க திருச்சி வாரியர்ஸ் 17.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.