செய்திகள்

சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். #ChennaiRain

மாலை மலர்

சென்னை:

சென்னையில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்தாலும், மாலை நேரங்களில் லேசான மழை பெய்து குளிர்வித்து வருகிறது. 

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும். விடுமுறை கிடையாது என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். #ChennaiRain