செய்திகள்

அமைச்சர்களின் அறைகளிலும் சோதனை நடத்த வேண்டும்- தங்க தமிழ்ச்செல்வன்

எனது அறையில் நடந்த சோதனை பாரபட்சமானது. அமைச்சர்களின் அறைகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்திற்காக அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் தங்கி இருந்து பிரசாரம் செய்து வருகிறார்.

அவர் தங்கி இருந்த விடுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து தங்க தமிழ்ச்செல்வன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவல்துறை வாகனங்களிலும் பணம் கடத்தப்படுகிறது. எனவே அந்த வாகனங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்த வேண்டும்.