தி.மு.க.வின் செய்தி தொடர்பு செயலாளராக இருந்தவர் டி.கே.எஸ். இளங்கோவன். அவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்த பதவியில் இருந்து நீக்கி, தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டார். அதில் டி.கே.எஸ். இளங்கோவன் பதவி நீக்கத்துக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கு கருணாநிதி சிலை திறப்பு விழா, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி விவரங்களில் அவர் அளித்த தகவல்கள் அதிருப்தியை ஏற்படுத்தியதே காரணம் என தகவல்கள் வெளியாகின.