திருப்பூர்:
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி வெளியிட்டார்.
பிளஸ்- 2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் 96.04 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
பிளஸ்- 2 தேர்வை மாணவர்கள் 11,183 பேரும், மாணவிகள் 13,859 பேரும் என மொத்தம் 25 ஆயிரத்து 42 பேர் எழுதினர்.
இதில் மாணவர்கள் 10 ஆயிரத்து 594 பேரும், மாணவிகள் 13 ஆயிரத்து 458 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக அளவில் திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 8-வது இடத்தை பெற்றுள்ளது.