திருப்புவனம்:
திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது அல்லிநகரம் விலக்கு பகுதி. இந்த பகுதியை சேர்ந்தவர் விவசாயி தவமணி. இவரது வாழைத்தோட்டம் கலியாந்தூர் செல்லும்
சாலையில் உள்ளது. இங்கு வாழைத்தார்களை வெட்ட தவமணி, மகன் கல்லாணை, தாத்தா சொக்கர் மற்றும் கணேசன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது மின்ஒயர்
அறுந்து கிடந்துள்ளது. இதில் கல்லாணையின் கால்பட்டதில் மின்சாரம் தாக்கி அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து
வந்து விசாரணை நடத்தினார்கள்.
மின்சாரம் தாக்கி பலியான கல்லாணை, அல்லி நகரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.