செய்திகள்

திருக்கழுக்குன்றத்தில் நாளை ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி: எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்

திருக்கழுக்குன்றத்தில் நாளை ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

மாலை மலர்

செங்கல்பட்டு:

எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச்சிலை திறப்பு விழா, ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. கொடி ஏற்றி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருக்கழுக்குன்றத்தில் நாளை (சனி) நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் விழாவுக்கு தலைமை தாங்குகிறார். மாவட்ட அவை தலைவர் கே.என்.ராமச்சந்திரன் எம்.பி., கே.மரகதம் குமரவேல் எம்.பி. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பென்ஜமின், அமைப்புச் செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், வாலாஜாபாத் கணேசன், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வேலாயுதம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.பக்தவச்சலம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். #tamilnews