செய்திகள்

எல்லை பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறல்: துப்பாக்கி சூட்டில் 3 இந்திய வீரர்கள் பலி

எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் ராணுவ அதிகாரி உள்பட 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் ராணுவ அதிகாரி உள்பட 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு உட்பட்ட கெரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்தியாவை சேர்ந்த ஒரு ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும், ஒரு வீரர் படுகாயம் அடைந்துள்ளார்.