செய்திகள்

தூத்துக்குடி கலவர வழக்கு- நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஜாமீனில் விடுதலை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கலவர வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஜாமீனில் விடுதலையானார். thoothukudiProtest #Sterlite

மாலை மலர்

நெல்லை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசுவை கைது செய்தனர்.

கைதான வியனரசு 55 நாட்களுக்கு மேலாக பாளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு தூத்துக்குடி கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்தது. இதையடுத்து அவரது தரப்பில் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டில் அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டது.

இன்று காலை வியனரசு ஜாமீனில் விடுதலையாகி பாளை சிறையில் இருந்து வெளியில் வந்தார். அவரை நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்பினர் வரவேற்றார்கள். thoothukudiProtest #Sterlite