தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணை தொடங்கியதும், துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 3 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.