செய்திகள்

கருணாநிதி மறைவால் திருவாரூர் தொகுதி காலியானது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி கடந்த சட்டசபை தேர்தலில் அவர் வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டது-

மாலை மலர்

சென்னை:

கருணாநிதியின் மறைவு குறித்த தகவல் சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கருணாநிதி போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் நேற்று (10-ந் தேதி) அறிவிப்பாணை வெளியிட்டார். அந்த அறிவிப்பாணை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.