பலியான முனியம்மாள். 
செய்திகள்

உடல்நிலை பாதிக்கப்பட்ட கணவரை கவனித்தபோது மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி

உடல்நிலை பாதிக்கப்பட்ட கணவரை கவனித்த மனைவி மர்மகாய்ச்சல் தாக்கி பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

ராயபுரம்:

திருவள்ளூர் அருகே உள்ள ஆரம்பாக்கத்தை அடுத்த தண்டலத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி முனியம்மாள் (வயது 37).

கடந்த சில நாட்களாக செல்வத்துக்கு காய்ச்சல் இருந்தது. உடல் நிலை பாதிக்கப்பட்ட அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முனியம்மாள் உடன் இருந்து கணவரை கவனித்து வந்தார். இதற்கிடையே முனியம்மாளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உள்ள பெண்கள் வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நேற்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. சிகிச்சை பலனின்றி முனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட கணவரை கவனித்த மனைவி மர்மகாய்ச்சல் தாக்கி பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.