அரிவாள் வெட்டு 
செய்திகள்

திருத்தணியில் தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு

திருத்தணியில் தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிப்பட்டு:

திருத்தணி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்மல் குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இன்று காலை இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் நிர்மல்குமார் அரிவாளால் விஸ்வநாதன் மற்றும் அவரது மகன் ராஜ்குமார் ஆகியோரை வெட்டினார். காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.