தொழிலாளி தற்கொலை 
செய்திகள்

திருப்பத்தூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தாலுகா சின்ன உடையாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா என்பவரின் மகன் பாலச்சந்திரன் (வயது 19), கட்டிட தொழிலாளி. இவர் அதே கிராமத்தில் நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.